மண்புழு உர தயாரிப்பு முறை

முதலில் நீர்த்தேக்கம் இல்லாத மேடான இடத்தைத் தேர்வு செய்யவேண்டும். குழி முறையை விட தொட்டி முறையில் மண்புழு வளர்ப்பது எளிதானது. அதனால் 2 மீட்டர் நீளம் 1மீட்டர் அகலமுள்ள பாலிதீன் தாளை விரிக்கவும், சிமெண்ட்டு தரையாக இருந்தால் பாலிதீன் தாள் தேவை இல்லை. சுற்றி 3 செங்கல் ஜல்லிகளை நிரப்பி 7 செ.மீ உயரம் மணலை நிரப்பவும். ஒரு லிட்டர் வேப்ப விதைக் கரைசல் அல்லது கடற்பாசி உரம் இடுவது மிகவும் நல்லது. இதன் மீது போதிய ஈரமாக நீர் விடவும் பின் 10 செ.மீ உயரம் களிமண் அல்லது வண்டலை நிரப்பவும். 2 லிட்டர் தயிர் மற்றும் சாணி கரைசலை தெளிக்கவும்.
ஈரப்பதம் 40 சதவீதம், வெப்பநிலை 20 சதவீதமாக இருப்பது சிறந்தது. 15 நாட்கள் கழித்து குளிர்ந்த பின்னர் 1000 மண் புழுக்களுக்கு குறைவில்லாமல் மண்ணுடன் 5 செ.மீ உயரம் இடவும். மேலும் 10 செ.மீ உயரம் வைக்கோல் அல்லது வேறு பண்ணைக் கழிவுகளை இடவும். பின் தென்னை அல்லது பனை ஓலைகளைக் கொண்டு மூடவும். நாள்தோறும் நீர் தெளிக்கவும். அதிக நீர்விட தேவையில்லை. தொடர்ந்து 30 நாட்கள் இவ்வாறு பராமரிக்கவும். இதன் மீது தென்னங்கீற்று கொட்டகை அமைப்பது நல்லது. கரையான், பூனை, கோழிகள், எலிகள் போன்றவையிடமிருந்து காக்க மெல்லிய வலை அமைப்பது நல்லது.
30 நாட்கள் கழித்து மண் புழுக்கள் இனப்பெருக்கம் செய்திருக்கும். மண்புழு படுக்கை அமைத்திருக்கும். 31 ஆம் நாள் முதல் ஓலைகளை அகற்றிவிட்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை மண்புழுக்களுக்கு உணவாக 50 கிலோ மக்கிய எரு அல்லது பண்ணைக் கழிவுகளை ஒவ்வொன்று முறை 5 செ.மீ உயரம் இட்டு நீர்த்தெளிக்கவும். ஏற்கனவே உயிர் உரம் கலந்து இருப்பின் மிகச் சிறந்ததாகும். 45 நாட்கள் கழித்து மண்புழு உரம் 500 கிலோ அளவு கிடைக்கும். ஆண்டுக்கு 8 தடவை எடுக்கலாம்.

மண்புழுஉரம் பாதுகாப்பு:

சேகரம் செய்த உரத்தை மூன்று நாட்கள் வெயிலில் உலரவைத்து லேசான ஈரப்பதத்துடன் பாலிதீன் பைகளில் அடைத்துவைக்கவும். தேவையான போது வயல்களுக்கு இடலாம். செயற்கை உரங்களை விட 10 மடங்கு சிறந்த உரம் மண்புழு உரமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *